அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற பொலிஸ் அதி காரங்கள் தொடர்பாக மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்பதே அரசாங்கத் தின் நிலைப்பாடாகும் என்று இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
மேலும் முக்கியமான காணிகளை வைத்துக்கொண்டு ஏனைய காணிகள் தொடர்பான அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங்கலாம் அதில் பாரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட் டார்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவின் இந்திய விஜயத்தின்போது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தவேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரி வித்திருந்தார். இந்நிலையில் இந்திய ஊட கம் ஒன்றுக்கு செவ்வியளித்த ஜனாதிபதி கோத்தபாய பொலிஸ் அதிகாரம் குறித்து சிந்திக்கவேண்டியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பி டுகையில்,
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம். 13 அவது திருத்தச் சட்டம் ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அது ஏற்கனவே அமுலில் தான் உள்ளது.
ஆனால் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரத்தை வழங்குவது தொடர்பில் சிக்கல் நிலவுகின்றது. இது தொடர்பில் ஆரம்பத் தில் இருந்தே பிரச்சினை உள்ளது.
எனவே தான் பொலிஸ் அதிகாரம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்வது தொடர்பாக ஆராய்ந்துவருகின்றோம். அதனை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து பார்க்கின்றோம். அதாவது பொலிஸ் அதிகாரத்தில் சில குறைந்தளவிலான அதிகாரம் கொண்ட விடயங்கள் குறித்து பரிசீலிக்கலாம். போக்குவரத்து விடயம் போன்றன தொடர்பாக பரிசீலிக்கலாம்.
ஆனால் முழுமையான பொலிஸ் அதிகாரத்தை வழங்குவது சிக்கலுக்குரியது. உதாரணமாக வட மாகாணத்துக்கு பொலிஸ் அதிகாரத்தை கொடுத்தால் மாகாண முதலமைச்சர் பொலிஸ் ஆணையாளரை நியமி்ப்பார். இந்த சூழலில் மேல் மாகாணத்தில் தவறு செய்த ஒருவர் வட மாகாணத்துக்கு சென்றுவிட்டால் மேல் மாகாணத்தில் உள்ள பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்ய வட மாகாணத்துக்கு செல்லவேண்டும். ஆனால் வட மாகாண பொலிஸ் ஆணையாளரின் அனுமதியின்றி மேல் மாகாண பொலிஸாரினால் சந்தேக நபரை கைது செய்ய முடியாத நிலை ஏற்படும்.
இலங்கை போன்ற நாட்டுக்கு இந்த நிலை பொருத்தமாகாது. அதனால்தான் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது சிக்கலுக்குரியது என்று கூறுகின்றோம்.
எனவே 13 ஆவது திருத்தத்தில் உள்ள பொலிஸ் அதிகாரம் குறித்து மீள்பரிசீ லனை செய்யவேண்டும் என்பதே அரசாங் கத்தின் நிலைப்பாடாகும். இதேவேளை காணி அதிகாரம் குறித்து பேசப்படுகின்றது. முக்கியமான காணிகளை வைத்துக் கொண்டு ஏனைய காணிகள் தொடர்பான அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங் கலாம் என்று எண்ணுகின்றோம் என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!