அரசியலை விட்டு வெளியேறும் ரணில்…?

ஐக்கிய தேசிய கட்சியின் சமகால தலைவரும் முன்னாள் பிரதருமான ரணில் விக்ரமசிங்க அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அவருக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அதற்றகமைய ஓய்வு பெற்ற பிரதமருக்கு வழங்கப்படும் சலுகைகளை தங்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜக்ஷவிடம் ரணில் கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதேவேளை, நேற்று காலை ரணில் விக்ரமசிங்க மல்வத்து அஸ்கிரி மாநாயக்க தேரரை சந்தித்துள்ளார்.அந்த சந்திப்பை அடுத்து ஊடகவியலாளர்கள் அவர் முன் கூடிய போது, தான் நன்றி செலுத்தவே இங்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.ரணிலின் அந்த பயணத்திற்காக எந்த ஒரு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களும் இணைந்துக் கொள்ளவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் தலைமைப் பதவி தொடர்பில் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்சியிலிருந்து பிரிந்து செல்ல சஜித் பிரேமதாஸ தலைமையிலான அணி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!