தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவராக கமல் குணரத்ன

சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவராக, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று பதவியேற்றுள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக உள்ள மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவராகவும், சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச நியமித்துள்ளார்.

அவர் நேற்று புதிய பதவியையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச நாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நகர்த்துகிறார் என்று ஐதேக மற்றும் ஜேவிபி ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!