சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து ரூ.1300 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்!

மத்திய அரசின், தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் இணைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி நடவடிக்கையில், இந்தியாவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 கிலோ கொக்கைன் போதைப்பொருள் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 55 கிலோ கொக்கைன், 200 கிலோ மெத்தம்படமைன் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1300 கோடியாகும். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக, 5 இந்தியர்கள், 1 அமெரிக்கர், 2 நைஜீரியர்கள் மற்றும் 1 இந்தோனேசியர் என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!