கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு மாற்று அணியில் இடமில்லை- விக்கி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை எமது அணியில் சேர்த்துக் கொள்ளமாட்டோம் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பகுதியில் நேற்று விக்னேஸ்வரன் தலைமையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை இடம்பெற்றது.குறித்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

கொள்கை ரீதியாக ஒன்றுபட்டவர்களை மாத்திரம் எமது மாற்று அணியில் இணைத்துக் கொள்ள தீர்மானித்துள்ளோம். கூட்டமைப்பை பிரிக்கும் எண்ணம் எமக்கு இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கொள்கை ரீதியாக இதுவரை களமும் அங்கிருந்து வெளியேறவில்லை. பொதுத் தேர்தலை இலக்காக கொண்டு கூட்டமைப்பில் இருந்து விலகி எம்முடன் இணைய முற்பட்டால் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!