இறுதிக்கட்டத்தில் மாற்று அணி!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான மாற்று அணியை உருவாக்கும் முயற்சிகள், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து, மிக விரைவில், கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு, கூட்டணி தொடர்பான உத்தியோகபூர்வ முடிவுகளும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

எனினும், கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான ஆசனப் பங்கீடுகள் தொடர்பில் சில முரண்பாடுகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!