கண்டனப் போராட்டத்துக்கு அழைப்பு!

வவுனியாவில் நேற்று ஜனநாயக வழியில் நீதி கேட்டுப் போராடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலைக் கண்டித்து, யாழ்ப்பாணத்தில், நாளை மறுநாள் கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் போராட்டம், யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு முன்பாக,, நாளை மறுநாள் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!