யாராலும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது..தெரிவித்த அமைச்சர்..!!

சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க எவருக்கும் இடமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,“சட்டத்தை எவர் அமுல்படுத்தினாலும் எந்தவிதமான பிரச்சினைகளுமில்லை. ஆனால் சட்டத்தை எவரும் கையில் எடுத்துக்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பார்களே ஆயின் அதற்கு எவருக்குமிடமில்லை.

கடந்த சில தினங்களாக அரசியல் பழிவாங்கல்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றன. இருந்தாலும் நாட்டின் நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயல்படுவது குறித்து பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!