வரி சலுகைகள் அனைத்தும் நாளை முதல் அமுலில்!

புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் குறைக்கப்பட்ட வரி சலுகைகள் அனைத்தும் நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கமைய வரிச்சலுகைகள் குறைக்கப்பட்டிருந்தன.

அதன்படியே குறைக்கப்பட்ட அனைத்து வரிச்சலுகைகளும் நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!