பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா?

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா விரைவில் நியமிக்கப்படவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக இருந்த அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கடந்த 31ஆம் நாளுடன் ஓய்வுபெற்றதை அடுத்து, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை, பதில் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமித்துள்ளார் சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச.

இந்தநிலையில், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானிக்கு கூடுதல் அதிகாரங்களை அளிக்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது.

இந்த திருத்தம் செய்யப்பட்ட பின்னர், விரைவில் மேஜர் ஜெனரல் சுமேத பெரோ, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போரில் முக்கிய பங்காற்றிய மேஜர் ஜெனரல் சுமேத பெரேரோ, இராணுவத் தலைமை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!