27 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் சிறைச்சாலையிலேயே மரணமானார். மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனையை சேர்ந்த செல்லப்பிள்ளை மகேந்திரன் ( வயது 46 ) என்பவரே நேற்று முன்தினம் மரணமடைந்துள்ளார்.
1993ம் ஆண்டு மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக படையினர் நடத்திய சுற்றிவளைப்பின்போது இவர் கைது செய்யப்படார். இவருக்கு எதிராக நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில், 68 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நீரிழிவு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் சிறையில் மரணமடைந்தார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!