“மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுபட்ட அனைவருக்கும் தண்டனையை பெற்றுக் கொடுப்போம்”

மத்திய வங்கி பிணைமுறி ஊழலுடன் தொடர்புபட்ட முன்னைய ஆட்சியாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு நீதிமன்றத்தின் மூலமாக கடுமையான தண்டனையை பெற்றுக்கொடுத்தே தீருவோம் என ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அத்துடன் விரைவில் கோப் குழு நியமிக்கப்பட்டு அடுத்த கட்ட விசாரணைகளை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றம் இன்று ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடிய வேளையில் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்த தடயவியல் கணக்கறிக்கை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதன்போதே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!