மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்த விடயங்கள் சம்பந்தப்பட்ட மத்திய வங்கியின் தடயவியல் கணக்காய்வு அறிக்கை சபாநாயகரிடம் கிடைத்துள்ள போதிலும் சபைப்படுத்தாது இருப்பது ஏனென சபையில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சியினர் மத்திய வங்கி பிணைமுறி ஊழலுடன் தொடர்புபட்ட எவராக இருந்தாலும் அவர்களை தண்டிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காம் கூட்டத்தொடர் இன்று ஆரம்பித்த நிலையில் பிற்பகல் ஒரு மணிக்கு சபை அமர்வுகள் கூடியது.
இந்நிலையில் சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதனை வலியுறுத்தினர்.
இது குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கூறுகையில்,
பாராளுமன்ற தெரிவுக்குழுக்கள் கலைக்கப்பட்டுள்ள காரணத்தினால் அறிக்கைகள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதேபோல் கோப் குழு கலைக்கப்பட்டுள்ள காரணத்தினால் இத்தனை காலமாக விசாரணைகளை முன்னெடுத்த மத்திய வங்கி பிணைமுறி விடயமும் மூடி மறைக்கப்படுவதாக எண்ணத்தொன்றுகின்றது. எனினும் மத்திய வங்கியினால் கோப் குழுவிற்கு வழங்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை சபாநாயகர் கைகளில் உள்ளது. அதனை சபைப்படுத்த வேண்டும் என்றார்.
இதனை அடுத்து ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ரவி கருணாநாயக் கூறுகையில், கோப் குழுவின் மூலமாக சபாநாயகருக்கு வழங்கப்பட்ட மத்திய வங்கி தடயவியல் கணக்கறிக்கை ஏன் மறைக்கப்படுகின்றது. இதன் உண்மைத்தன்மையை சபை அறிந்துகொள்ள வேண்டும். அதேபோல் கோப் குழுவின் தலைவராக சுனில் ஹந்துநெத்தியை மீண்டும் நியமிக்க வேண்டும். விசேடமாக சபாநாயகர் வசம் இருக்கு
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!