மகனின் திருமணத்தில் கூட பங்கேற்க முடியாத பூஜித!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு, புதல்வரின் திருமண நிகழ்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. அவருடைய மகனின் திருமண வைபவம் கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற, அதன் சாட்சியாளராகவும் அவர் கையொப்பமிட ஏற்பாடாகியிருந்தது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு சந்தேகநபரான முன்னாள் பொலிஸ் மா அதிபர் சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் அனுமதி கோரியிருந்தார்.

எந்தவொரு சந்தேகநபருக்கும், சிறைக் கைதிக்கும் தமது பெற்றோரின் மரணச் சடங்குகள் தவிர்ந்த எந்தவொரு நிகழ்விலும் அனுமதிப்பதற்கு சிறைச்சாலைகள் சட்டத்தில் அனுமதி வழங்கப்படவில்லையென சிறைச்சாலைகள் ஆணையாளர் பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!