தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கும் சம்பந்தன்!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கம் தமக்கு இல்லை எனவும் அது தொடர்பில் கட்சி இறுதி முடிவு மேற்கொள்ளும் எனவும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் கொழும்பில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில்கேள்வி எழுப்பிய போதே இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உரை தொடர்பிலும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் கலந்துரையாடியதாக இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கம் தமக்கில்லை எனவும் அது தொடர்பில் கட்சி இறுதி முடிவு மேற்கொள்ளும் எனவும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!