சிசிரிவியில் சிக்கிய விமானம்!

பதுளை – ஹப்புத்தளை பிரதேசத்தில் நேற்று விபத்துக்குள்ளான விமானப்படை விமானம், கடைசியாக நிலத்தில் மோதுவதற்கு முன்னர் சிசிரிவி கமரா ஒன்றில் பதிவாகியுள்ளது.

வீரவில பகுதியில் இருந்து ரத்மலான நோக்கி 4 பேருடன் பயணத்தை ஆரம்பித்த இலங்கை விமானப் படைக்கு சொந்தமான Y-12 என்ற இலகுரக விமானமே விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் நால்வர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்கான காரணம் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இது தொடர்பில் ஆராய்வதற்காக குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தாழ்வாக விமானம் பறந்தமையே விபத்துக்கான காரணம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவிதிருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!