நான் சதிகாரன் அல்ல! – ரணில்

நான் சதி செய்பவனல்ல என்றும், வெளியாகியுள்ள இறுவட்டுக்களை சபாநாயகர் பெற்று எம்.பிக்கள் தொடர்புபட்டுள்ளனரா என ஆராய்ந்து உண்மை நிலையை அறிவிக்க வேண்டுமெனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தன்னை கொலை செய்ய ரஞ்சன் ராமநாயக்கவுடன் முன்னாள் பிரதமர் சதி செய்ததாக இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே பாராளுமன்றத்தில் கூறியிருந்தார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க,

உதயசாந்த எம்.பி பாராளுமன்றத்தில் இது பற்றி முன்வைத்த போது நான் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தேன். ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெல வீ்ட்டிலிருந்து ​பொலிஸார் இறுவட்டுகளை கைப்பற்றியிருந்தனர். ஆனால் இன்று சகலருக்கும் பொதுச் சொத்தாக இவை மாறியுள்ளன. பலரும் பேசுகின்றனர்.சபாநாயகர் பொலிஸாரிடமிருந்து அவற்றை பெற்று எம்.பிக்கள் தவறு செய்திருந்தால் அது பற்றி அறிவிக்க வேண்டும். யாராவது சட்டத்திற்கு முரணாக நடந்திருந்தால் அம்பலப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!