அமெரிக்கர்களுக்கு தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கை!

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம்,இலங்கையில் வசிக்கும் தமது நாட்டுக் குடிமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் பதட்டத்தைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய “பாதுகாப்பு அச்சுறுத்தல்” குறித்தே அவர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“மத்திய கிழக்கில் அதிகரித்த பதற்றம் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும். இது உலகளாவிய எச்சரிக்கையாகும். அனைத்து அமெரிக்கர்களும் வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் https://step.state.gov இல் பதிவு செய்யுமாறு தெரிவிக்கின்றோம் ”என்று தூதரகம் டுவீட் செய்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!