வடக்கில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – ஆளுநர் அறிவிப்பு!

வடக்கு மாகாணத்தில் எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என்று வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்எம். சார்ள்ஸ் அறிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிவிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மகாணத்தில் உள்ள வாகன சாரதிகள் நேற்றுக் காலை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது. மக்கள் வீண் வதந்திகளை கேள்வியுற்று இவ்வாறு தமது நேரங்களை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருந்ததைஅவதானிக்க முடிந்தது.

இதை அவதானித்த வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் வடக்கு மாகாண மக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தலில், எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது என்ற செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென்றும் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதென்றும் மக்கள் வீண் குழப்பம் அடைய வேண்டாமென்றும் வடக்கு ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!