கொழும்பு வருகிறார் சீன வெளிவிவகார அமைச்சர்!

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். எதிர்வரும் 13 ஆம் திகதி வருகை தரவுள்ள அவர் 14 ஆம் திகதி நண்பகலில் இலங்கையில் இருந்து புறப்பட்டு செல்லவுள்ளார்.

அவர் 14 ஆம் திகதி காலை வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்தனவை சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி கோத்தாபய எதிர்வரும் 14 ஆம் திகதி சீனாவுக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ள நிலையில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகை தருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!