மாணவி துஷ்பிரயோகம் – ரதனை கட்சியில் இருந்து இடைநிறுத்தியது தமிழரசு கட்சி!

மாணவியொருவரை துஸ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள -செட்டிகுளம் மகாவித்தியாலய ஆசிரியரும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான எம்.எம்.ரதன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தமது கட்சியிலிருந்து இடை நிறுத்தியுள்ளதாக தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட கிளை தலைவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சியை சேர்ந்த குறித்த ஆசிரியர் மாணவி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக வெளியான குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வவுனியா – செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக எமது கட்சியின் உறுப்பினர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வவுனியாவில் கூடிய தமிழரசுகட்சியின் வவுனியா கிளை ஆராய்ந்திருந்தது. இந்நிலையில் அவர் மீது கட்சியின் தலைமை விசாரணை ஒன்றை மேற்கொண்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்சியின் வவுனியா மாவட்ட கிளை ஏகமானதாக தீர்மானித்துள்ளது.

அத்துடன் விசாரணை நடவடிக்கைகள் இடம்பெற்று முடியும் வரை அவர் கட்சிலிருந்து இடைநிறுத்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கபட்டமைக்கமைய அவர் கட்சியின் உறுப்புரிமை மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் தமிழரசு கட்சியில் அங்கம் வகித்திருந்ததுடன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!