எம்சிசியை கிழித்தெறிவேன்! – சஜித் சூளுரை

எம்சிசி உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதமதாச தெரிவித்துள்ளார். கெஸ்பேவயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ எம்சிசி உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கு எதிர்க்கட்சி ஒருபோதும் இடமளிக்காது. பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று கட்சி, எதிர்க்கட்சி பேதங்களின்றி ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து எம்சிசி உடன்படிக்கையை துண்டு துண்டாக கிழிப்பதற்கு தயார். ” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!