ரஞ்சனின் குரல் பதிவுகள் குறித்த விசாரணை ஆரம்பம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் தொலைபேசி உரையாடல்களில் குரல் பதிவுகள் குறித்த விசாரணைகள் இன்று (13) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச இரசாயணப் பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இறுவெட்டுக்கள் அடங்கிய பொருட்களை அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திடம் முன்வைத்து அது தொடர்பான அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு நுகேகொட நீதவான் நீதிமன்றம் கடந்த 9 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

அதற்கமைவாக கைப்பற்றப்பட்ட இறுவட்டுக்கள் அடங்கிய பொருட்களை அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திடம், குற்றப்புலனாய்வு பிரிவு ஒப்படைத்துள்ளது. இந்த நிலையிலேயே இவ் விசாரணைகள் ஆரம்பிக்கபடவுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!