தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் மரணம்!

யாழ்ப்பாணம் – சரசாலைப் பகுதியில் நேற்று முற்பகல் 10.30 மணியளவில், தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவர் மரணமடைந்துள்ளார். தென்னை மரத்தில் தேங்காய் பிடுங்க மரத்தில் ஏறிய போது தவறி விழுந்துள்ளார். உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சரசாலை தெற்கு சரசாலையைச் சேர்ந்த கந்தையா சத்தியசீலன் வயது 46 என்பவரே மரணமடைந்தவராவார் . தென்மராட்சி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி மரண விசாரணையை மேற்கொண்டு சட்ட வைத்திய அதிகாரி மூலம் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொண்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!