துணை நடிகைகள் அரைகுறை ஆடையுடன் ஆபாச நடனம்.. சிக்கிய 21 நடிகைகள்.. பகீர் ஷாக்.!!

தெலுங்கானா மாநிலத்தில் ஹூபிளி ஹில்ஸ் பகுதியிலிருக்கும் கிளப் ஒன்று தெலுங்கு துணை நடிகைகளை அழைத்து வந்து அரைகுறை ஆடையுடன் ஆபாச நடனம் ஆட வைப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் அதிரடியாக உள்ளே நுழைந்து இருக்கின்றனர்.

அப்பொழுது கிளப்பில் இருந்த அனைவரும் நடனத்தை ரசித்துக் கொண்டிருக்க காவல்துறையினரை கண்ட அவர்கள் சிதறி ஓடி இருக்கின்றனர். அரைகுறை உடையுடன் நடனமாடிக் கொண்டிருந்த 21 நடிகைகளும் தப்பி ஓட வழியில்லாமல் அங்கேயே சிக்கிக்கொள்ள அவர்களை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து ஆடைகளை மாற்றிக் கொள்ள அவகாசம் கொடுத்து கைது செய்து இருக்கின்றனர்.

முகத்தை மூடியபடி வந்த அவர்கள் அனைவரையும் நடனமாட அழைத்து வந்த மினி பேருந்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது, தங்களுடைய உடைமைகளுடன் காவல் நிலையத்திற்கு வந்த நடிகைகளில் ஒருவர் படம் பிடித்துக் கொண்டிருந்த செய்தியாளரை தாக்கி இருக்கின்றார்.

மேலும், அவர் கையில் இருந்த கேமராவை தட்டிவிட்டு இருக்கின்றார். விரைந்து வந்த காவல்துறையினர் அந்த நடிகையை எச்சரித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இது போன்ற நடனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. மது உடன் கேளிக்கை விடுதி நடத்துவோர் நடிகைகளை அழைத்து வந்து ஆபாச நடனம் ஆட வைத்து லட்சங்களை குறிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

இதுபோலவே சென்னை அண்ணா சாலையில் சாந்தி திரையரங்கம் அருகே இருக்கும் வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் இளம்பெண்களை ஆடவிட்டு தவறான செய்கைக்கு அழைக்கும் நிகழ்ச்சி அரசியல் செல்வாக்குடன் அரங்கேறி வருகின்றது. இதனை திருவல்லிக்கேணி காவல்துறையினர் பலமுறை பிடிக்க முயன்றும் தடை செய்ய இயலவில்லை என்பது வருந்ததக்க விஷயமாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!