இளைஞர்கள் – இராணுவத்தினர் இடையே மோதல்! – நாகர்கோவிலில் பதற்றம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் இராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து, 4 இளைஞர்களை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து குறித்த பகுதியை இராணுவத்தினர் சுற்றிவளைத்துள்ளதால் பதற்ற நிலை காணப்படுகிறது.

நேற்று நள்ளிரவு குறித்த பகுதியில் இராணுவ வாகனத்துக்கு வழி விடவில்லை எனக் கூறி இளைஞர்கள் சிலருடன் இராணுவத்தினர் முரண்பட்டுள்ளனர். இதனையடுத்து இரு தரப்புக்குள்ளும் மோதல் இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலில் இரு தரப்பிலும் சிலர் காயமடைந்தனர் என கூறப்படும் நிலையில், உடனடியாக சம்பவ இடத்தில் இராணுவம் குவிக்கப்பட்டு 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் உடனடியாக பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

நேற்று நள்ளிரவு தொடக்கம் குறித்த பகுதியை இராணுவம் முற்றுகையிட்டு தொடர் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள்- இராணுவம் இடையில் முறுகல் நிலை காணப்படுவதாகவும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு இன்று காலை சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!