விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து ஓய்வுபெறக்கூடாது! – கஜேந்திரகுமார்

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து ஓய்வுபெறக்கூடாது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். “என்னுடைய தனிப்பட்ட கருத்து விக்னேஸ்வரன் ஐயா அரசியலில் இருந்து ஓய்வுபெறக்கூடாது.

அவர் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட வேண்டும். அவர் தொடர்ந்தும் ஆக்கபூர்வமான செயல்களை முன்னெடுக்க வேண்டும். தமிழினத்திற்கு தொடர்ந்தும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமை வகிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!