பேசும் சொற்களை கவனமாக பயன்படுத்த வேண்டும்: ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை!

ஈரானின் பொருளாதாரம் சீர்குலைந்து வருவதாகவும், அந்நாட்டின் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகிக் கொண்டிருப்பதால், தலைவர்கள் பேசும் சொற்களை கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் தலைமையை ட்விட்டர் பதிவு ஒன்றில் கடுமையாக விமர்சித்துள்ள டிரம்ப், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா குறித்து ஈரான் தலைவர் கொமேனி கூறி வரும் அவதூறுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் கொமேனி அமெரிக்காவை கடுமையாக தாக்கியதுடன் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளையும் கடுமையாக சாடினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!