ராஜிதவின் பிணை ரத்தாகுமா? – 21ஆம் திகதி முடிவு

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு பிணை வழங்கிய உத்தரவுக்கு எதிராக சட்டமா அதிபர் முன்வைத்த மீளாய்வு மனு தொடர்பில் பிரதிவாதிகள் தரப்பிற்கு அழைப்பாணை விடுப்பதற்கான உத்தரவு எதிர்வரும் 21ஆம் திகதி பெற்றுக்கொடுக்கப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குறித்த மீளாய்வு மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணையின்போது பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!