மிருசுவில் படுகொலை – குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல்!

யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை, ​வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்கள், அச்சுறுத்தும் வகையில் விவரங்களைச் சேகரித்துள்ளனர் நேற்று மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியே, பாதிக்கப்பட்டவர்களால் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மிருசுவில் பகுதியில், 2000ஆம் ஆண்டு, 8 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையில் உள்ள நிலையில், தற்போது இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட ஒருவரைத் தேடி, வெள்ளை வாகனமொன்றில் வந்த நால்வர், அவரிடம் விசாரணை நடத்தியதாகவும் அதேபோல, கடந்த 11ஆம் திகதி, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், படுகொலை நடந்த இடம், குடும்பத்தில் இறந்தவர்கள் யார் போன்ற தகவல்களை விசாரித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய், சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருப்பதாக வெளியான செய்திக்குப் பின்னரே, இவ்வாறு இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!