கதிர்காமர் கொலை- ஜேர்மனியில் முன்னாள் புலி உறுப்பினருக்கு சிறை!

இலங்கையின் முன்னாள்வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் தொடர்பாக, புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு ஜேர்மனி நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. குறித்த நபரை 6 வருடங்கள், 10 மாதங்கள் சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை படுகொலை செய்ய தகவல் வழங்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஜேர்மனில் புகலிடம் கோரிய ஜ.நவநீதன் எனும் இலங்கை அகதிக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!