அம்பலமாகும் ரஞ்சனின் குரல்பதிவுகள்! ஆட்டங்காணும் கொழும்பு அரசியல்! சிக்கப்போகும் பெரும்புள்ளிகள்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலின் குரல் பதிவுகள் பல்வேறுபட்ட அரசியல் தரப்புக்களிலும் சலசலப்பையும், பல அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய புள்ளிகளுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கொழும்பு மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பத்மினி ரணவக்கவிடம் சுமார் 3 மணி நேர விசாரணை மேற்கொள்ளப்பட்டடுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவுடன் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!