தமிழர்கள் கடத்தல்; கரன்னகொட உட்பட 14 பேருக்கு அழைப்பாணை!

தமிழர்கள் உட்பட 11 இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் ஓய்வு கடற்படை தளபதியும் அண்மையில் பதவி உயர்வு பெற்ற அட்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னகொட மற்றும் 13 பேரை விசேட மேல் நீதிமன்றத்தின் ட்ரயல் அட் பார் ஆஜத்தில் ஆஜராகுமாறு இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த 14 பேருக்கும் பெப்ரவரி 24ம் திகதி மன்றில் ஆஜராக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!