பெண்களின் உள்ளாடைகள் மற்றும் செருப்புகளை குறிவைத்து திருடும் திருடன்!

கோவை துடியலூர் மீனாட்சி கார்டன் பகுதியில் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் செருப்புகளை குறிவைத்து திருடும் சைக்கோ திருடனை சிசிடிவி உதவியுடன் போலீசார் தேடிவருகின்றனர். இப்பகுதியில் உள்ள சில வீடுகளில், பெண்களின் உள்ளாடைகள் மற்றும் செருப்புகள் சில மாதங்களுக்கு முன்பு திருடுபோனதாக கூறப்படும் நிலையில் கடந்த 17ஆம் தேதியும் அதேபோல திருட்டு அரங்கேறியுள்ளது.

இதையடுத்து அங்கிருந்த சிசிடிவிகளை ஆராய்ந்தபோது, பெண்களை போல நைட்டி அணிந்து வலம்வரும் மர்ம நபர் ஒருவர், ஆள் இல்லா வீடுகளின் பூட்டை உடைத்து, பெண்களின் உள்ளாடைகள் மற்றும் செருப்புகளை மட்டும் குறிவைத்து திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. மர்ம நபர் யார், பீரோவில் நகை மற்றும் பணம் இருந்தும் அவற்றில் கை வைக்காமல் பெண்களின் உள்ளாடைகளை மட்டும் குறிவைத்து திருடுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!