பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதியிடம்!

பாதுகாப்பு அமைச்சின் அதிகாரம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்ற போதே, பாதுகாப்பு அமைச்சின் அதிகாரம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதை அவர் உறுதிப்படுத்தினார்.

இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக தகுதியான நபர் நியமிக்கப்பட்டுள்ளமையினால் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல் இல்லை எனவும் அமைச்சரவை பேச்சாளர் இதன்போதும் தெரித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!