கட்சியின் தலைமைத்துவ பிரச்சினைக்கு தீர்வு

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ பிரச்சினையை எதிர்வரும் வாரத்திற்குள் தீர்ப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மோதர பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டின் பொருளாதாரம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், வீழ்ச்சியடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!