சிறையில் உள்ள கைதிகளுக்கும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை வழங்குமாறு தேர்தல் கண்காணிப்பாளர்கள் கோரியுள்ளனர். சுதந்திர மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான அமைப்பான கஃபே மற்றும் மனித உரிமைகள் மத்திய நிலையம் ஆகியன இந்த கோரிக்கையினை எழுத்து மூலமான கடிதத்தை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ள.
ஒருவர் சிறையில் இருப்பதால் அவருக்குள்ள வாக்களிக்கும் உரிமையை பறிக்க முடியாது என்று தேர்தல் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உலகில் உள்ள பல நாடுகளில், கைதிகளுக்கும் தேர்தலில் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இதேபோன்ற முறையை இலங்கையிலும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் தற்போது இலங்கையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் உள்ளனர் என்றும் அவர்களில் பலருக்கு வாக்குரிமை உள்ளதாகவும் குறித்த இரு அமைப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!