சீனாவில் இருந்து மாணவர்களுடன் திரும்புகிறது சிறப்பு விமானம்!

சீனாவின் வுஹானில் உள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வரச் சென்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான சிறப்பு விமானம், மாணவர்களை ஏற்றிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் சிக்கியுள்ள இலங்கையை சேர்ந்த 33 மாணவர்களை அழைத்து வர நேற்று பிற்பகல் 3.55 மணியளவில் இலங்கையில் இருந்து யூ.எல். 1422 சிறப்பு விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. குறித்த விமானம் வுஹான் டியெங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அந்த விமானம் இன்று காலை 4.05 மணியளவில் அங்கிருந்து இலங்கை மாணவர்களை ஏற்றிக் கொண்டு பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விமானம் இன்று காலை 7.30 மணி அளவில் இலங்கை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!