இலங்கை வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் சோதனை

சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தரும் பயணிகளை விமான நிலையத்தில் வைத்தே சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தல் மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் தற்போதைய நிலைமை குறித்து தெளிவுபடுத்தும் வகையில் சுகாதார அமைச்சில் இன்று விசேட ஊடக சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் , கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து ஆபிரிக்க நாடுகளுக்கு பரவினால் அதனால் ஏற்பட கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டே உலக சுகாதார ஸ்தாபனம் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் எனவே அது குறித்து இலங்கையர்கள் எதுவித அச்சமும் கொள்ள தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!