திருகோணமலை கடற்பரப்பில் 8 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று அதிகாலை திருகோணமலை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். கைதானவர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக திருகோணமலை கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!