244 இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

72 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் 244 இராணுவ அதிகாரிகள் பதவி உயர்வு கிடைக்கப் பெற்று உயர்த்தப்பட்டுள்ளனர்.

இதன்படி 17 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாகவும், 45 லெப்டினன் கேணல்கள், கேணல்களாகவும், கேர்னல்களாகவும் 49 மேஜர்கள் லெப்டினன் கேணல்களாகவும், 42 கெப்டன்கள் மேஜராகவும், 80 லெப்டினன்கள் கெப்டனாகவும், 11 இரண்டாவது லெப்டினன்கள் லெப்டினன்களாகவும் பதவி உயர்தப்பட்டுள்ளனர்.

இதே வேளை இராணுவத்திலிருந்து விலகிச் சென்றவர்களுக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை பொது மன்னிப்புக்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!