கூட்டணியில் இணைவது குறித்து இன்னமும் முடிவு இல்லை!

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் இணைந்து கொள்வது குறித்து தமிழ் தேசியக் கட்சி இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தவித முடிவையும் எடுக்கவில்லை எனவும், தமிழ் இனத்தின் விடிவிற்காக எந்தவித விட்டுக்கொடுப்பிற்கும் செல்ல முடியும் என்றும் தமிழ் தேசியக் கட்சியின் பிரசார செயலாளர் ஜெயரட்ணம் ஜனார்தனன் கூறினார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக் கட்சி தனியாக களமிறங்கவுள்ளதாக கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா ஏற்கனவே அறிவித்திருந்தார். அதேவேளை, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் தமிழ் தேசியக் கட்சி இணைந்து கொள்ளவுள்ளதாக, சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தமிழ் தேசியக் கட்சி யாழ்ப்பாணத்தில் நேற்று ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்ட பதிலை அளித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!