அரசு தரும் வாய்ப்பை உரிய நேரத்தில் பயன்படுத்துங்கள் – ஆளுநர்

வடக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான தொழிவாய்ப்பை பெற்றுக் கொள்ள அரசு தரும் வாய்ப்பை உரிய நேரத்தில் சரியான ஒழுங்குமுறையை பின்பற்றி பெற்றுக்கொள்வதற்கான முயற்சியை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு வடக்குமாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் ஆலோசனை வழங்கியுள்ளார்.

தொழில்வாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தில் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதி தினம் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான வயதெல்லை 45 ஆக அதிகரித்திருப்பதாகவும், விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதி தினம் இம் மாதம் 14 ஆம் திகதி என முன்னர் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், வயதெல்லை 38 ஆக குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமையை ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார் .

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!