தமிழ் பிரதி நிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும்.!

கிழக்கு மாகாணத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டுமென கருணா எனும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை பகுதியில் நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலம்,

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், தமது தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தனித்து போட்டியிடவுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும். அதற்காக எமது கட்சி கடுமையாகப் பாடுபடும்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை தம் வசம் வைத்திருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு எதுவித சேவையையும் செய்யவில்லை.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எம்முடன் இணைந்து போட்டியிடத் தயாராகுமாயின், அது குறித்து பரிசீலிப்பாேம் – என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!