மாங்குளம் வைத்தியசாலை அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம்!

முல்லைத்தீவு – மாங்குளம் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அகழ்வின்போது கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் கிளிநொச்சி சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கை கிடைக்கும் வரை இந்த பணிகள் நிறுத்தப்படுவதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அகழ்வுப்பணிகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் எஸ்.லெனின்குமாரின் கட்டளையின் பேரில் மேற்கொள்ளப்பட்டன.இதன்போது மனித எச்சங்கள், ஆடைகள் இரும்புத்துண்டுகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!