தாக்குதலுக்கு தயாராகிய மூவர் ஆயுதங்களுடன் கைது!

சங்கானை பகுதியில் வன்முறைச் சம்பவம் ஒன்றுக்கு தயாராகிய மூவர், நேற்றிரவு சைக்கிள் பிறீவீல் இறுக்கப்பட்ட பொல்லுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் மூவரும் வன்முறைச் சம்பவம் ஒன்றுக்காக மானிப்பாயிலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை சங்கானை பகுதியில் கைது செய்யப்பட்டனர் . சந்தேக நபர்களிடமிருந்து 6 பொல்லுகள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் சைக்கிள் செயின் பிறீவீல் இறுக்கப்பட்டிருந்தன. அவை ஆபத்தான ஆயுதங்களாகப் பார்க்கப்படுகின்றன. , மூவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கஞ்சா சரைகளும் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்கள் மூவரும் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர்” என்றும் பொலிஸார் கூறினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!