எனக்கே முதலில் அமெரிக்கா தடை விதித்தது!- என்கிறார் பொன்சேகா

அமெரிக்காவினால் முதலாவதாக பாதிக்கப்பட்டவன் நானே. அமெரிக்கா எனக்கே முதலில் விசா வழங்க மறுத்தது. எனக்கு விசா வழங்கப்படாமை தொடர்பில் எதுவும் பேசாதவர்கள் சவேந்திர சில்வாவுக்கு தடை வந்தவுடன் முதலைக்கண்ணீர் வடித்தபடி பேசுவது அரசியல் இலாபம் தேடுவதற்கே என்று தெரிவித்துள்ளார் முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

நாடாளுமன்றத்தில் நேற்று சபை ஒத்தி வைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது அல்ல. அவருக்கு ஏற்பட்டுள்ள நிலையை நானும் எதிர்க்கின்றேன் என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!