அவுஸ்திரேலியாவில் ரெயில் தடம்புரண்டு விபத்து – இருவர் பலி!

ஆஸ்திரேலியாவின் வாலன் (wallan) நகரில், ரயில் தடம் புரண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். சிட்னியில் இருந்து மெல்போர்ன் நோக்கி 160 பயணிகளுடன் சென்ற ரயிலானது, வாலன் பகுதியில் வந்தபோது திடீரென தடம் புரண்டுள்ளது.

இந்த விபத்தில் 5 பெட்டிகள் முழுமையாக கவிந்ததில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!