மீண்டும் நாளை கூடும் ஐதேக செயற்குழு!

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் நேற்றைய கூட்டம் எவ்வித தீர்மானமும் இன்றி நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் நாளை மத்திய செயற்குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய கூட்டத்தின் போது சமகி ஜன பலவேகய அமைப்பின் மத்திய குழுவிற்கு நூற்றுக்கு 60 சதவீத உறுப்பினர்களை ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் சின்னம் மற்றும் யாப்பு தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்காக நேற்று பிற்பகல் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் சிறிகொத தலைமையகத்தில் கூடியது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!