பதவி விலகுவது தொடர்பில் வெளியான செய்தி முற்றிலும் பிழை – வடிவேல் சுரேஷ் தெரிவிப்பு

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் பிழையானது என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமை பீடத்தில் மாற்றம் ஏற்படப் போவதாக சிங்கள நாளிதல் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து குறித்த செய்தி உண்மைக்கு புறம்பானது என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!